ரிஷப் பந்த்
ரிஷப் பந்த் படம் | AP
ஐபிஎல்

முதல் முறையாக பேட்டிங் செய்த அனுபவத்தைப் பகிர்ந்த ரிஷப் பந்த்!

DIN

பேட்டிங் செய்யும்போது பதற்றமாக உணர்ந்ததாகவும், முதல் போட்டியில் விளையாடிய விதம் திருப்தியளிப்பதாகவும் தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

கார் விபத்திலிருந்து குணமடைந்துள்ள ரிஷப் பந்த் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அவர் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு ரிஷப் பந்த் பேசியதாவது: மைதானத்தில் பேட்டிங் செய்ய நுழைந்தபோது நான் சிறிது பதற்றமாக உணர்ந்தேன். நான் பதற்றமாக உணர்வது இது முதல்முறையல்ல. இந்தப் போட்டியில் நான் செயல்பட்ட விதம் எனக்கு திருப்தியளித்தது என்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் நாடகங்கள் ஜூன் 4 -ல் முடிந்துவிடும்! : உத்தவ் தாக்கரே

"கொளத்தூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ரூ.110 கோடியிலான நவீன புதிய சிறப்பு மருத்துவமனை"

இலக்கு 272! குறைந்த தொகுதிகளில் போட்டி என்பது காங்கிரஸின் பலவீனமா?

பாஜக வென்றால் ஸ்டாலின், மம்தாவையும் சிறையிலடைப்பார்கள்: கேஜரிவால்

"எதையும் தலைக்கு ஏத்தமாட்டேன்!”: ராகவா லாரன்ஸ் பேட்டி

SCROLL FOR NEXT