படம் | ஐபிஎல்
ஐபிஎல்

முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

DIN

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

அதிகம் கவலைப்படவில்லை

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு அணியாக முதல் போட்டியில் ஏற்டட்ட தோல்வி குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. முதல் போட்டியில் வெல்வது என்பது எப்போதும் சிறப்பான விஷயம். முதல் போட்டியில் வெற்றி பெற்றால் நேர்மறையான தொடக்கமாக இருந்திருக்கும். ஆனால், முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து நாங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம் என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நாளை (மார்ச் 26) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவயுக ராதை... பாப்ரி கோஷ்!

எல்லா பட்டமும் நல்லா இருக்கு! - 4th International Kite Festival in நம்ம சென்னை!

தேவி தரிசனம்... ஹிமா பிந்து!

பராசக்தியில் அப்பாஸ்!

தேவதை பார்க்கும் நேரம்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT