ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த அஸ்வின்!
சிஎஸ்கே வீரர் அஸ்வின் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
சிஎஸ்கே வீரர் அஸ்வின் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
18-ஆவது ஐபிஎல் தொடரில் ஆரம்ப கட்ட போட்டிகள் தொடங்கியுள்ளன. அனைத்து அணிகளும் ஒரு போட்டிகளாவது விளையாடியிருக்கின்றன.
இதில் சென்னை அணி மும்பையுடன் சமீபத்தில் மோதி அசத்தல் வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் தமிழக வீரரும் சிஎஸ்கே வீரருமான அஸ்வின் செய்த சாதனையை கவனம் பெறாமல் சென்றது.
ஐபிஎல் வரலாற்றிலேயே பவர்பிளேவில் சுழல்பந்து வீச்சாளர்களிலே முதல்முறையாக 50 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதனைக் குறிப்பிட்ட சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில், “பவர்பிளேவில் அண்ணாத்த ஆட்டம்” எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளது.
சிஎஸ்கே அடுத்த போட்டியில் ஆர்சிபியை வரும் மார்ச்.28ஆம் தேதி சந்திக்கவிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.