டெவால்டு பிரீவிஸ் பகிர்ந்த புகைப்படங்கள்.  படங்கள்: இன்ஸ்டா / டெவால்டு பிரீவிஸ்
ஐபிஎல்

வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள்..! நெகிழ்ந்த சிஎஸ்கே வீரர்!

சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

DIN

சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார்.

சிறப்பாக விளையாடி சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பிரச்னையை தீர்த்துள்ளார். ரசிகர்களிடம் மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளார்.

டெவால்டு ப்ரீவிஸ் களத்துக்கு வரும்போது 125 டெசிபலில் சிஎஸ்கே ரசிகர்கள் சப்தமிட்டது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சீசனில் 4 போட்டிகளில் 163.64 ஸ்டிரைக் ரேட்டில் 126 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் இந்தியா-பாகிஸ்தான் போரினால் ஒரு வாரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியதாவது:

சென்னை அணி, பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், அற்புதமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி.

சேப்பாக்கம் திடல் மிகவும் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.

இந்தியா முழுவதும் கிடைத்த ஆதரவுக்கு நன்றி. இந்தமுறை இந்தியாவில் நான் இருந்த நேரம் இதயத்துக்கு நெருக்கமானது. சென்னையில் ஏற்பட்ட அனுபவம் காலத்துக்கும் மறக்காது. விரைவில் சந்திப்போம் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உள்பட 3 போ் கைது

தில்லி, உ.பி.யில் போலீஸாா் அதிரடி சோதனை: ரூ.30 லட்சம் ஹெராயினுடன் 2 போ் கைது!

பீதம்புராவில் 3 மெட்ரோ நிலையங்களின் பெயா் மாற்றம்: தில்லி முதல்வா் அறிவிப்பு!

பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு: மாவட்டத்தில் 9,176 போ் எழுதினா்

அரியலூரில் 97% எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT