FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்யலாம்..! புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

இந்தியாவுக்கு வரமுடியாத வெளிநாட்டு வீரர்களுக்காக தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்வது குறித்து...

Updated On : 14 மே 2025, 9:22 pm IST
ஐபிஎல் போஸ்டர்.
பகிர்:

இந்தியாவுக்கு வரமுடியாத வெளிநாட்டு வீரர்களுக்காக தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் புதிய விதியை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. நிறுத்தப்பட்ட போட்டிகள் வரும் மே.17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

தெ.ஆ., ஆஸி., இங்கிலாந்து வீரர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மாற்றப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வேளையில் அவரவர் தேசிய அணிகளுக்கான போட்டிகள் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனம் ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ நிர்வாகம் அளித்ததாகக் கூறும் ஈமெயிலில் கூறப்பட்டவை:

வெளிநாட்டு வீரர்களின் காயம், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வரமாலிருப்பதால் அவர்களுக்கான மாற்று வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யலாம். ஆனால், இந்த மாற்றங்கள் இந்த சீசனோடு முடிவுக்கு வரும்.

அடுத்தாண்டு தக்கவைப்பு பட்டியலில் தற்போது எடுக்கப்படும் வீரர்களை சேர்க்கமுடியாது.

தற்காலிக மாற்றுவீரர்கள் ஐபிஎல் 2026 ஏலத்தில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments