கே.எல். ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!
ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. தில்லியில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 264 ரன்கள் குவித்தது.
டெல்லி அணியில் அதிரடியாக ஆடி கே.எல். ராகுல் 67 பந்துகளுக்கு 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக நிதீஷ் ராணாவும் 44 பந்துகளுக்கு 91 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் வீரர்கள் அர்ஷ்தீப் சிங், சேவியர் பார்ட்லெட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Advertisement
Advertisement
265 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஆட்டத்தில் அனல் பறந்தது. பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடினர். ஆர்யா 43(17), பிரப்சிம்ரன் 76(26) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அவர் 36 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக தில்லி அணியில் குல்தீப் யாதப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது பஞ்சாப் அணி.