ஐபிஎல்-2020

பந்துவீச கூடுதல் நேரம்: ஷ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்

DIN


துபை:  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் கூறியிருப்பது: அபுதாபியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், அதன் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது. 

அபுதாபியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதில்,  முதலில் பேட் செய்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய  டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT