ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸில் 4-ம் இடம் பிடித்த கோல்ப் வீராங்கனை அதிதி அசோக்: பிரதமர் பாராட்டு

DIN


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கோல்ப் விளையாட்டில் சிறப்பாக விளையாடி 4-ம் பிடித்த இந்திய வீராங்கனை அதிதி அசோக்குக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கோல்ப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக், 4-ம் இடம் பிடித்து நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார். இன்று நடைபெற்ற கோல்ப் போட்டியில் அதிதி அசோக், பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அவர் 2-ம் இடத்தில் இருந்தார். இந்நிலையில் போட்டியின் முடிவில் 4-ம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை அதிதி அசோக் தவறவிட்டார்.

ரியோ ஒலிம்பிக்ஸில் 41-வது இடம் பெற்ற 23 வயது அதிதி, இம்முறை தொடர்ந்து முன்னிலை பெற்று இந்திய விளையாட்டு ரசிகர்களிடம் கோல்ப் விளையாட்டின் மீதான கவனத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் பலருடைய பாராட்டுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அதிதி அசோக்குக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி, ட்விட்டரில் கூறியதாவது:

நன்றாக விளையாடினீர்கள் அதிதி அசோக். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் திறமையை வெளிப்படுத்தி மன உறுதியுடன் செயல்பட்டீர்கள். நூலிழையில் பதக்கம் கிடைக்கவில்லை. ஆனால் எந்த இந்தியரை விடவும் முன்னேறிச் சென்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள். வருங்காலப் போட்டிகளுக்கு என் வாழ்த்துகள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT