காலிறுதியில் தோல்வியுற்றார் ரீதிகா ஹூடா! வெண்கலம் வாய்ப்பிருக்கிறது!
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ரீதிகா ஹூடா காலிறுதியில் தோல்வியுற்றார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில், வெண்கலப் பதக்கச் சுற்றில் அமன் ஷெராவத் 13- 5 என்ற புள்ளிகள் கணக்கில் பியூா்டோ ரிகோவின் டரியன் குரூஸை வீழ்த்தி அசத்தினாா்.
இதன் மூலம் அறிமுக ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வென்று அசத்தினார் அமன் ஷெராவத். இத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளன.
இந்நிலையில் மல்யுத்தம் மகளீர் ஃபிரீஸ்டைலில் 76 கிலோ பிரிவில் மதியம் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் வெற்றி பெற்றார்.
Advertisement
Advertisement
காலிறுதியில் உலகின் நம்.1 வீராங்கனையான ஐபேரியுடன் மோதிய ரீதிகா ஹூடா, 1-1 என போராடி டை பிரேக்கரில் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார்.
ஆனால் இத்துடன் முடியவில்லை. ரெபெசேஜ் விதியின் படி ஐபேரி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றால் ரீதிகா ஹீடாவுக்கு வெண்கல பதக்க போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதும்.
இதற்கு முன்பாக இந்தியா இந்தமாதிரி இரண்டாம் வாய்ப்பில் 2008இல் சுஷில் குமார், யோகேஷ்வர் தத் 2012இல், சாக்ஷி மாலிக் 2016இல், பஜ்ரங் புனியா 2020 ஒலிம்பிக்கிலும் வெண்கலம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.