முகப்பு
ஸ்பெஷல்

2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு குறித்து அறிவிப்பேன்: யுவ்ராஜ் சிங்

ஐபிஎல் போட்டியில் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் மொத்தமாக 36 ரன்கள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:50 PM
பகிர்:

2019 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு ஓய்வு குறித்து அறிவிப்பேன் என பிரபல கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

2019 வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பேன். 2019-க்குப் பிறகு என் முடிவை அறிவிப்பேன். கடந்த 2000ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். 17-18 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே நிச்சயம் 2019-க்குப் பிறகு ஓய்வு குறித்து அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு யுவ்ராஜ் சிங் ஓய்வு பெறுவது உறுதியாகிவிட்டது.

இந்திய அணிக்காகக் கடைசியாக 2017 ஜூன் மாதம் விளையாடினார் யுவ்ராஜ். தற்போதைய ஐபிஎல் போட்டியில் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் மொத்தமாக 36 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.