ஸ்பெஷல்

அதிரடி சிக்ஸர்கள்: வாட்சன், தோனி பேட்டிங்குகளின் விடியோ

புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த சென்னை அணி, தற்போதைய வெற்றியின் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடித்தது...

எழில்

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாக போராடியும் 13 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி அணி தோல்வியடைந்தது. தில்லி டேர் டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் 30-வது ஆட்டம் புணேவில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் சென்னையும், கடைசி இடத்தில் தில்லி அணியும் உள்ளன. முன்னதாக டாஸ் வென்ற தில்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

7 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 78 ரன்களை குவித்த நிலையில் வாட்சன் ஆட்டமிழந்தார். ராயுடு 41 ரன்களில் வீழ்ந்தார். கேப்டன் தோனி 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன், 22 பந்துகளில் 51 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20-வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 211 ரன்களை எடுத்திருந்தது. தில்லி தரப்பில் அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மேக்ஸ்வேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆனால், 20-வது ஓவர் முடிவில் தில்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அணி தரப்பில் ஆசீப் 2 விக்கெட்டையும், என்கிடி, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் தனி நபராக விஜய் சங்கர் போராடியும் தில்லியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்க முடியவில்லை.

புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த சென்னை அணி, தற்போதைய வெற்றியின் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கம்மாள் டிரெய்லர்!

விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஏன் பேச வேண்டும்? பேட்டிங் பயிற்சியாளர் கேள்வி!

சர்வதேச தேர்தல் நிறுவனத்தின் தலைவராக ஞானேஷ் குமார் டிச. 3-இல் பதவியேற்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.89.53 ஆக நிறைவு!

பாகிஸ்தானில் சுற்றுலாப் படகுகள் மோதி விபத்து: 2 பேர் பலி; 18 பேர் காயம்!

SCROLL FOR NEXT