முகப்பு
ஸ்பெஷல்

வெளியேறியது பெங்களூரு: 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிபெற்றது.

Updated On : 19 மே, 2018 at 7:45 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:35 PM

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 53-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் ராகுல் திரிபாதி 58 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்தார். ரஹானே 33, கிளாஸன் 312 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

பின்னர் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனியாகப் போராடிய டி வில்லியர்ஸ் 53 ரன்கள் சேர்த்தார். பார்தீவ் படேல் 33 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஷ்ரேயாஸ் கோபால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் பிளே ஆஃப் சுற்றுப்போட்டிகளில் தங்கள் வாய்ப்பை தக்க வைத்துள்ளன. ஆனால், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.