ஸ்பெஷல்

பந்து 85 மீட்டரைத் தாண்டிச் சென்றால் 8 ரன்கள்: பிரபல வீரர் கோரிக்கை!

எழில்

பிரபல ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், டி20 கிரிக்கெட் விதிகளில் புதிய திருத்தம் ஒன்றை மேற்கொள்ள கிரிக்கெட் நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டி20 ஆட்டங்களில் 85 மீ.க்கு மேல் செல்லும் பந்துகளுக்கு சிக்ஸ் வழங்கப்படுவதற்குப் பதிலாக 8 ரன்கள் வழங்கவேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. இதுபற்றி அவர் கூறியதாவது:

இன்றைய ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் விதிமுறைகள் மாற்றப்படவேண்டும். தொழில்நுட்பத்தில் நாம் நன்கு வளர்ச்சி கண்டுள்ளதால், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 85 மீட்டருக்கு மேல் பறந்து செல்லும் பந்துக்கு வழக்கமான ஆறு ரன்கள் வழங்காமல் 8 ரன்கள் வழங்க வேண்டும்.

கிறிஸ் கெயில் உள்ளிட்ட வீரர்கள் அடிக்கும் பந்து நீண்ட தூரம் சென்று விழுவதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். கோல்ப் விளையாட்டில் 350 மீட்டர் தூரம் அடிக்கும் டைகர் வுட்ஸ் உள்ளிட்ட வீரர்களை ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள். 

ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் இருக்கும்போது, எட்டு ரன்கள் தேவைப்படும்போது கெய்ல், ரஸ்ஸல், பொலார்ட் போன்ற வீரர்கள் ஆடுகளத்தில் இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள்.

இவ்வாறு சொல்லும் டீன் ஜோன்ஸ், இதுகுறித்து வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பை உதவிக்கு எடுத்துக்கொள்கிறார். 

1870களில், 1880களின் தொடக்கத்தில் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டினால் 5 ரன்கள் என்றும் மைதானத்தைத் தாண்டி பந்து விழுந்தால் 6 ரன்கள் என்றும் விதிமுறைகள் இருந்தன. 1898-ல் ஆஸ்திரேலியாவின் ஜோ டார்லிங் முதல் சிக்ஸரை அடித்தார். அவர் அடித்த பந்து மைதானத்துக்கு வெளியே சென்று விழுந்தது. 

1910-ல் இந்த விதிமுறை மாற்றப்பட்டு, எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றால் ஆறு ரன்கள் என்று புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. எனவே இந்த விளையாட்டின் ஒவ்வொரு விதிமுறையும் அவ்வப்போது மாற்றப்பட்டே வருகிறது. கிரிக்கெட் ஆடுகளத்தின் நீளத்தைத் தவிர இதர எல்லா விதிமுறைகளும் காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT