வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் போட்டி, தொழில்முறை வீரர்கள் ஸ்குவாஷ் சங்கத்தின் (பிஎஸ்ஏ) சார்பில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் வேலவன் 7-11, 11-5, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் லையீட் புல்லாரை தோற்கடித்தார்.
இந்தப் போட்டியில் தகுதிநிலை வீரராக களமிறங்கிய வேலவன் தனது முதல் சுற்றில் 11-7, 8-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் அகீல் ரெஹ்மானை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான ஹரிந்தர் பால் சாந்து 10-12, 11-9, 7-11, 10-12 என்ற செட் கணக்கில் எகிப்தின் முகமது எல்ஷெர்பினியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.