உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் 14-21, 18-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சன் வான் ஹோவிடம் தோல்வியடைந்தார். இதனால் ஸ்ரீகாந்தின் தொடர் வெற்றிகளுக்கு (13 ஆட்டங்களில் வெற்றி) ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்தும், சன் வானும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சன் வான் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக மோதிய இரு ஆட்டங்களிலும் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அதேபோல இன்றும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்துள்ளார் ஸ்ரீகாந்த்.