முகப்பு
செய்திகள்

ஒருநாள் போட்டியில் தோனி புதிய சாதனை!

இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்துள்ளது. மனீஷ் பாண்டே 50, தோனி 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்று வருகிறது. தோனி விளையாடும் 300-வது ஒருநாள் போட்டி இது.

இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்துள்ளது. மனீஷ் பாண்டே 50, தோனி 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இதன் மூலம் தோனி ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக அளவிலான நாட் அவுட்களைக் கொண்ட வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டியில் அதிக அளவிலான நாட் அவுட்கள்

73 தோனி
72 பொல்லாக், வாஸ் 
67 பெவன்

முழு கட்டுரையைப் படிக்க →