செய்திகள்

ஐஎஸ்எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை

DIN

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதியில் சென்னை வீரர் ஜீஜீ ஆட்டத்தின் 65-ஆவது நிமிடத்தில் அணியின் கோல் கணக்கை தொடங்கினார்.
அதற்கு பதிலடியாக கொல்கத்தா வீரர் ஜெகின்ஹா 77-ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை வீரர் இனிகோ கால்டெரான் 84-ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார். விடாப்பிடியாக தொடர்ந்த கொல்கத்தாவும் 89-ஆவது நிமிடத்தில் கோலடித்து மீண்டும் சமன் செய்தது. அந்த கோலை கொல்கத்தாவின் ஜாஸி குகி அடித்தார்.
இதனால் ஆட்டம் டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் சென்னை வீரர் ஜீஜீ அதிரடியாக மீண்டும் ஒரு கோல் அடிக்க இறுதியில் சென்னை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT