செய்திகள்

துளிகள்...

DIN

ஹிமாசலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் பலத்த மழை பெய்து வருவதால், இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறும் பஞ்சாப் மாநிலம், மொஹாலிக்கு திங்கள்கிழமை செல்லும் திட்டத்தை இலங்கை அணி வீரர்கள் கைவிட்டனர். அடுத்த 2 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், சாலை மார்க்கமாக வீரர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றுவரும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு இந்திய வீரர் சௌரவ் கோஷல் முன்னேறினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சூதாட்ட குற்றச்சாட்டுக்கு ஆளான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஸீர் ஜாம்ஷெட், அதுதொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க தவறியதாகக் கூறி, கிரிக்கெட் போட்டிகளில் ஓராண்டு விளையாடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT