ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவுக்கு "வைல்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியா ஓபன், டென்னிஸில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தப் போட்டியில், இவருக்கு "வைல்ட் கார்டு' அளிக்கப்பட்டுள்ளதன் மூலம், நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்க முடியும்.
இதுகுறித்து அஸரென்கா கூறுகையில், "ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஏற்கெனவே இரண்டு முறை கைப்பற்றியிருக்கிறேன். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்' என்றார்.
குடும்பப் பிரச்னை காரணமாக, இந்த ஆண்டு அமெரிக்கா ஓபனில் அஸரென்கா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.