செய்திகள்

உலக பாரா தடகளம்: இந்தியாவுக்கு இரு பதக்கம்

DIN

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சரத்குமார், வருண் பட்டி ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற சரத்குமார் 1.84 மீ. உயரம் தாண்டி வெள்ளி வென்றார். இதுதவிர அவர் தனது "பெர்சனல் பெஸ்டையும்' பதிவு செய்துள்ளார்.
அதே பிரிவில் இந்திய வீரர் வருண் பட்டி 1.77 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இந்தப் பிரிவில் அமெரிக்காவின் சாம் கிரீவ் 1.86 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றார்.
இந்தப் போட்டியில் இந்தியா இதுவரையில் ஒரு தங்கம், இரு வெள்ளி, இரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா 29-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT