செய்திகள்

மாநில ஜூனியர் கூடைப்பந்து: திருநெல்வேலி, சென்னை அணிகள் சாம்பியன்

DIN

கோவையில் நடைபெற்ற 16 வயதுக்குள்பட்டோருக்கான (ஜூனியர்) மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் திருநெல்வேலி அணியும், மகளிர் பிரிவில் சென்னை 1 மண்டல அணியும் பட்டம் வென்றன.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டிகள் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கின. இந்தப் போட்டியின் 5-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், ஆடவர் அரையிறுதியில் திருநெல்வேலி 82-71 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை 2 மண்டல அணியையும், திருவள்ளூர் மாவட்ட அணி 56-45 என்ற புள்ளிக் கணக்கில் மதுரை மாவட்ட அணியையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றன.
பின்னர் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் திருநெல்வேலி அணி 87-85 என்ற புள்ளிக் கணக்கில் திருவள்ளூர் மாவட்ட அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. ஆடவர் பிரிவில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மதுரை மாவட்ட அணி 74-59 புள்ளிக் கணக்கில் சென்னை 2 மண்டல அணியை வீழ்த்தியது.
மகளிர் பிரிவு: மகளிருக்கான அரையிறுதியில் சென்னை 2 மண்டல அணி 71-62 என்ற புள்ளிக் கணக்கில் தஞ்சை அணியையும், சென்னை 1 மண்டல அணி 63-59 என்ற புள்ளிக் கணக்கில் நாகை அணியையும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இறுதி ஆட்டத்தில் சென்னை 1 மண்டல அணி 64-55 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை 2 மண்டல அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. முன்னதாக நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் நாகை அணி 58-28 என்ற புள்ளிக் கணக்கில் தஞ்சை அணியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT