செய்திகள்

ஏடிபி சேலஞ்சர்: காலிறுதியில் பயஸ், ராஜா ஜோடிகள்

DIN

பிரிட்டனின் இல்க்ளே நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-கனடாவின் ஆதில் ஷமாஸ்தீன், பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
பயஸ்-ஆதில் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 4-6, 6-4, 12-10 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மட் ரெய்ட்-ஜான் பேட்ரிக் ஜோடியைத் தோற்கடித்தது. பயஸ்-ஆதில் ஜோடி தங்களின் காலிறுதியில் பெலாரஸின் ஆன்ட்ரே வாஸிலெவ்ஸ்கி-சிலியின் ஹன்ஸ் காஸ்டில்லோ ஜோடியை எதிர்கொள்கிறது.
மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் டொமினிக் குடியரசின் எஸ்டரெல்லா-பர்படாஸின் டேரியன் கிங் ஜோடியைத் தோற்கடித்தது. பூரவ்-திவிஜ் ஜோடி தங்களின் காலிறுதியில் தாய்லாந்தின் சஞ்சய் ரதிவதனா-சஞ்சத் ரதிவதனா ஜோடியை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT