செய்திகள்

குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் தேவேந்திரோ சிங்

DIN

உலன்பாதர் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங், அங்குஷ் தாஹியா ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மங்கோலிய தலைநகர் உலன்பாதரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் 52 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் தேவேந்திரோ சிங், மங்கோலியாவின் கன்டுலம் முங்கான் எர்டீனைத் தோற்கடித்தார். இறுதிச் சுற்றில் இந்தோனேசியாவின் அல்டாம்ஸ் சுகுரோவை சந்திக்கிறார் தேவேந்திரோ சிங்.
ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அங்குஷ் தாஹியா, ரஷியாவின் ரத்னா சிபிகோவைத் தோற்கடித்தார். அங்குஷ் தனது இறுதிச் சுற்றில் தென் கொரியாவின் மான் சோ சோலை எதிர்கொள்கிறார்.
அதேநேரத்தில் இந்தியாவின் ஷியாம் குமார் (49 கிலோ), முகமது ஹுஸாமுதீன் (56 கிலோ), பிரியங்கா செüத்ரி (60 கிலோ) ஆகியோர் தங்களின் அரையிறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT