செய்திகள்

பஞ்சாப் ஐபிஎல் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

எழில்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் அந்த அணியின் கேப்டனாக முரளி விஜய் இருந்தார். முதலில் மில்லர் கேப்டனாக இருந்தா. பிறகு பாதியில் அந்த வாய்ப்பு விஜய்க்குக் கிடைத்தது. இருப்பினும் கடந்த ஐபிஎல்-லில் பஞ்சாப் அணி கடைசி இடத்தையே பிடித்தது. இதையடுத்து தற்போது அந்த அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் அணியில் மார்கன், டேரன் சாமி, ஆம்லா ஆகியோர் இருந்தும் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

இந்த ஐபிஎல்-லில் மூன்று ஆஸி. வீரர்கள் கேப்டனாக உள்ளார்கள். பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல்லும் புணே அணிக்கும் ஸ்மித்தும் ஹைதராபாத் அணிக்கு வார்னரும் கேப்டனாக உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT