செய்திகள்

தியோதர் டிராபி: ரோஹித் சர்மா, பார்தீவ் படேல் தலைமையில் அணிகள் அறிவிப்பு! 

இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

எழில்

மார்ச் 25 முதல் நடைபெறவுள்ள தியோதர் டிராபி போட்டியின் இரு அணிகளுக்கு (இந்தியா ப்ளூ, இந்தியா ரெட்) ரோஹித் சர்மா, பார்தீவ் படேல் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

விஜய் ஹசாரே போட்டியைத் தமிழக அணி வென்றதால் மூன்றாவது அணியாக அது தகுதி பெற்றுள்ளது.

இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஹர்பஜன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்தியா ரெட் அணியின் கேப்டனாக பார்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய அணியில் ஷிகர் தவண், கெதர் ஜாதவ், மனிஷ் பாண்டே போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

SCROLL FOR NEXT