ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 90.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் மத்தியப் பிரதேச அணி, முதல்நாள் முடிவில் 80 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆவது நாள் ஆட்டத்தை அங்கித் சர்மா 75, மிஹிர் ஹிர்வானி 16 ரன்களுடன் தொடங்கினர்.
இதில் ஹிர்வானி 17, அங்கித் சர்மா 77 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக இஷ்வர் பாண்டே 29 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். தமிழகம் தரப்பில் விக்னேஷ் 4, முகமது 3, வாஷிங்டன் சுந்தர் 2, சாய் கிஷோர் ஒரு விக்கெட் எடுத்தனர்.
தமிழகம்- 191/6: இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய தமிழக அணி, சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 67 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் 94, மகேஷ் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக ஆடிய கேப்டன் அபினவ் 5, இந்திரஜித் 25, வாஷிங்டன் சுந்தர் 9, ரங்கராஜன் 8 ரன்களில் வெளியேறினர். சங்கர், அபராஜித் டக் அவுட் ஆகினர். மத்தியப் பிரதேச தரப்பில் இஷ்வர், புனித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.