செய்திகள்

பாகிஸ்தான் 219 ரன்கள் சேர்ப்பு

DIN

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது.
அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் ஒரு கட்டத்தில் அந்த அணி 27.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பார் ஆஸம்-ஷதாப் கான் ஜோடி அசத்தலாக ஆட, பாகிஸ்தான் மோசமான நிலையில் இருந்து மீண்டது. இந்த ஜோடி 109 ரன்கள் குவித்தது. பாபர் ஆஸம் 133 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 
மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷதாப் கான் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. இலங்கைத் தரப்பில் கேமேஜ் 4 விக்கெட்டுகளையும், திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT