செய்திகள்

என்பிஏ ஏலத்தில் இந்திய வீரர்

DIN

அமெரிக்காவின் "என்பிஏ ஜி லீக்' கூடைப்பந்தாட்டப் போட்டிக்கான ஏலத்தில் இந்திய கூடைப்பந்து அணி வீரர் அம்ஜியோத் சிங் பங்கேற்கிறார்.
சண்டீகரைச் சேர்ந்த 25 வயதான அம்ஜியோத் சிங், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் அங்கம் வகித்து வருகிறார். இந்தியாவில் நடைபெறும் "யுபிஏ புரோ கூடைப்பந்து லீக்' போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார் அம்ஜியோத் சிங். 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட இவர், முன்கள வீரர் ஆவார். இதனிடையே, "என்பிஏ ஜி லீக்' கூடைப்பந்தாட்டப் போட்டிக்கான ஏலத்தில் 146 வீரர்களில் ஒருவராக அம்ஜியோத் சிங்கும் பங்கேற்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT