செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் போட்டியில் பதக்கம்: தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை

DIN

கனடாவில் நடைபெற்ற உயரம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் மூன்று பேருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உயரம் குன்றியோருக்கான ஏழாவது உலக தடகள விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 36 பேர் பதக்கங்கள் வென்றுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த கே.கணேசன், சி.மனோஜ், ஏ.செல்வராஜ் ஆகியோர் ஏழு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
அவர்களின் சாதனைகளைப் பாராட்டி ஊக்கப் பரிசுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மூன்று தங்கப் பதக்கம் வென்ற கே.கணேசனுக்கு ரூ.15 லட்சம், ஒரு தங்கம், 2 வெள்ளி பதக்கங்கள் வென்ற சி. மனோஜுக்கு ரூ.11 லட்சம், 1 தங்கப் பதக்கம் வென்ற ஏ.செல்வராஜுக்கு ரூ.5 லட்சம் என ரூ.31 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
மேலும், வீரர்களின் பயிற்சியாளர்கள் ரஞ்சித்குமார், சுந்தர் ஆகியோருக்கும் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT