மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி தடுமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது...
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
எனினும் இங்கிலாந்து அணியின் அற்புதமான பந்துவீச்சால் 9-வது ஓவர் முதல் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. மந்தனா அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார்.
31 ஓவர்களின் முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.