செய்திகள்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தொடர்ந்து 2-ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

DIN

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து தொடர்ந்து 2-ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை யமாகுச்சியை எதிர்கொண்டார். 

இதில், பி.வி.சிந்து முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால், யமாகுச்சி 2-ஆவது செட்டை நெருக்கடியுடன் எதிர்கொண்டார். அதன் விளைவாக, 2-ஆவது செட்டில் இருவரும் போட்டி போட்டு புள்ளிகளை பெற்று வந்தனர். இறுதியில் பி.வி.சிந்து 24-22 என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்றினார். 

இதன்மூலம், 21-16, 24-22 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பி.வி.சிந்து தொடர்ந்து 2-ஆவது முறையாக உலக பாட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து இதுவரை 2 வெண்கலம் மற்றும் 1 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது, இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அவர் குறைந்தபட்சம் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT