செய்திகள்

தேசிய கூடைப்பந்து: மேற்கு வங்கத்தை வீழ்த்தியது தமிழகம்

DIN

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் தமிழகம், மேற்கு வங்கத்தை வீழ்த்தியது.
சென்னையில் 68-ஆவது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 6-ஆம் நாளான திங்கள்கிழமை மகளிர் பிரிவு ஆட்டத்தில் தமிழகம் 84-50 என்ற புள்ளிகள் கணக்கில் மேற்கு வங்கத்தை வென்றது. அதிகபட்சமாக தமிழக தரப்பில் ஸ்ரீவித்யா 17 புள்ளிகளும், மேற்கு வங்கத்தில் சுகுமோனி 10 புள்ளிகளும் வென்றனர். எனினும், மற்றொரு ஆட்டத்தில் தமிழகம் 64-94 என்ற கணக்கில் இந்திய ரயில்வேயிடம் தோற்றது.
இதர ஆட்டங்களில் உத்தரப் பிரதேசம் 69-54 என்ற கணக்கில் தெலங்கானாவையும், நடப்புச் சாம்பியன் கேரளா 63-42 என்ற கணக்கில் தில்லியையும் வீழ்த்தின. எனினும், மற்றொரு ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம் 63-78 என்ற கணக்கில் கர்நாடகத்திடம் வீழ்ந்தது. சத்தீஸ்கர் 90-61 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தை வென்றது.
ஆடவர் பிரிவு ஆட்டங்களில் சண்டீகர் 83-70 என்ற கணக்கில் கேரளத்தை வென்றது. சர்வீசஸ் 87-59 என்ற கணக்கில் குஜராத்தையும், பஞ்சாப் 70-68 என்ற கணக்கில் உத்தரகண்டையும் வீழ்த்தின. இந்திய ரயில்வே 103-79 என்ற கணக்கில் ராஜஸ்தானை பந்தாடியது. இதனிடையே, சர்வீசஸ் அணி மற்றொரு ஆட்டத்திலும் 90-70 என்ற கணக்கில் கர்நாடகத்தை வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT