குரோஷியாவோடு-ஆர்ஜென்டீனா ஆட்டம் நடைபெற்ற நோவாகிராட் மைதானத்தில் ஆர்ஜென்டீனா ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிக்காத நிலையில், இரண்டாம் பாதியில் தொடர்ந்து 3 கோல்கள் வாங்கி தோல்விடைந்தது. இது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. இது எங்களுக்கு பெரிய அவமானம் என ஜோகுயின் என்ற ரசிகர் தெரிவித்தார். பார்சிலோனா அணிக்காக சிறப்பாக விளையாடும் மெஸ்ஸி, சொந்த நாட்டுக்காக சரியாக ஆடவில்லை என மைக்கேல் ஏஞ்சல் என்ற ரசிகர் கொதிப்புடன் சாடினார்.