செய்திகள்

சண்டிமாலுக்கு அனுமதி இல்லை

தினமணி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலின் மேல்முறையீட்டை ஐசிசி நிராகரித்துள்ளது. இதனால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார்.
 முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில், 2-ஆவது போட்டியின்போது சண்டிமால் பந்தின் தன்மையை மாற்ற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஐசிசி போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட சண்டிமாலுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
 அதற்கு எதிராக சண்டிமால் மேல் முறையீடு செய்திருந்த நிலையில், அதை நீதித்துறை ஆணையர் மைக்கெல் பெலாஃப் நிராகரித்தார். இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து சண்டிமால் விலக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT