முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தை வங்கதேச அணியுடன் எதிர்கொண்ட இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 6 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.
கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தை வங்கதேச அணியுடன் இந்திய அணி எதிர் கொண்டது.
இதில் 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமுதுல்லா பந்துவீச்ச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 89, ஷிகர் தவன் 35, சுரேஷ் ரெய்னா 47 ரன்கள் என எடுத்து வங்கதேச அணிக்கு 177 என இலக்கு நிர்ணயித்தனர்.
இதனையடுத்து இரண்டாவதாக களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதில் அணியில் அதிகபட்சமாக ரஹ்மான் 27, தமிம் இக்பால் 27, முஷ்பிகுர் 72 என எடுத்தனர்.
இத்தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றியும் 1 போட்டியில் தோல்வியும் கண்டுள்ளது.