செய்திகள்

ரோஹித் 89, வங்கதேசத்துக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்

முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக ரன்கள் குவித்தார்.

Raghavendran

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டம் மற்றும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்தியா புதன்கிழமை எதிர்கொள்கிறது.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையிடம் இந்திய அணி வீழ்ந்தது. 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இந்நிலையில், இந்தியாவுடனான ஆட்டத்தில் தோல்வியுடன் தொடங்கிய வங்கதேசம், பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஆட்டத்தில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முகமதுல்லா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் ஷர்மா, 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் குவித்தார். சுரேஷ் ரெய்னா, 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் விளாசினார். ஷிகர் தவன் 35 ரன்கள் சேர்த்தார்.

வங்கதேச தரப்பில் ரூபெல் ஹுசைன் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதையடுத்து அந்த அணி 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி என்ற சிறப்பை பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

அம்மனின் அவதாரங்கள்

SCROLL FOR NEXT