செய்திகள்

தமிழ் டிவீட்களை தொடங்கினார் ஹர்பஜன் சிங்: கபாலி முதல் சர்கார் வரை ஃபுல் அப்டேட் 

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டதை அடுத்து ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவீட் செய்துள்ளார். 

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் இருந்து 3 வீரர்களை மட்டும் விடுவித்து 22 வீரர்களை தக்கவைத்துள்ளது. தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களுள் ஹர்பஜன் சிங்கும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவீட் செய்துள்ளார். அந்த பதிவில், 

"தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன். திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் @ChennaiIPL. சும்மா நெருப்பா, சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா! வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்து. பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து. Delighted to be retained for 2019 @ipl @CSKFansOfficial" என்று பதிவிட்டுள்ளார். 

கடந்த ஐபிஎல் தொடரில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றதில் இருந்து சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்லும் வரை மாஸான தமிழ் சினிமா வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை டிவீட்களாக பதிவிட்டு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT