செய்திகள்

முதல் டெஸ்டில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிப்பு: பிருத்வி ஷா அறிமுகம்!

எழில்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் வரும் 4-ம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் 12-ம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளன. ஆசியக் கோப்பை போட்டி ஓய்வுக்கு பின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் கேப்டன் விராட் கோலி. 

நாளை விளையாடவுள்ள இந்திய அணியின் 12 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களாக ராகுலும் பிருத்வி ஷாவும் விளையாடவுள்ளார்கள். இதையடுத்து பிருத்வி ஷா டெஸ்ட் வீரராக அறிமுகமாகவுள்ளார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஷர்துல் தாக்குர் நாளை விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஒருவேளை இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களே போதும் என கோலி முடிவெடுத்தால் ஷர்துல் தாக்குர் நாளைய டெஸ்டில் விளையாட வாய்ப்புண்டு. மேலும், இங்கிலாந்தில் விளையாடிய விஹாரி, அணியில் இடம்பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT