செய்திகள்

பாட்மிண்டன் வீரர் காஷ்யப் பாஸ்போர்ட் மாயம்

தினமணி

தனது பாஸ்போர்ட்டை தொலைத்ததால் உதவுமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வாராஜுக்கு சுட்டுரை மூலம் கோரிக்கை வைத்தார் பாட்மிண்டன் வீரர் பாருபல்லி காஷ்யப்.
 கடந்த 2014 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற காஷ்யப் தற்போது ஓடென்ஸ் நகரில் நடக்கவுள்ள டென்மார்க் ஓபன் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் தனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். இதனால் அவர் போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுட்டுரை மூலம் தனக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் சுஷ்மாவுக்கு கோரிக்கை வைத்தார். மேலும் அப்பதிவில் பிரதமர் மோடி, விளையாட்டு அமைச்சர் ரத்தோர் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT