செய்திகள்

மீடூ புகார் எதிரொலி: ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரிக்கு கட்டுப்பாடு

தினமணி

மீடூ பாலியல் புகார் எதிரொலியாக ஐசிசி குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புகாருக்கு உடனே விளக்கம் தர கிரிக்கெட் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.
 தனியார் தொலைக்காட்சியில் உயரதிகாரியாக இருந்த போது ராகுல் ஜோரி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என பெண் பத்திரிகையாளர் மீடூவில் புகார் செய்திருந்தார்.
 இது ஜோரிக்கு சிக்கலை ஏற்பட்டது. கடந்த 2016 முதல் பிசிசிஐ சிஇஓவாக உள்ளார் அவர். இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் தர கிரிக்கெட் நிர்வாகக் குழு உத்தரவிட்டது.
 மேலும் வரும் 16 முதல் 19 வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஐசிசி குழுக் கூட்டத்தில் ஜோரி பங்கேற்கத் தேவையில்லை. அவருக்கு பதிலாக தற்காலிக செயலர் அமிதாப் செளத்ரி கலந்து கொள்ளலாம். பாலியல் புகார் தொடர்பாக உடனே பதில் தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT