செய்திகள்

டென்மார்க் ஓபன்: சிந்து அதிர்ச்சி தோல்வி

DIN


டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை சிந்து, 17-21, 21-16, 18-21 என்ற கேம் கணக்கில் கடும் போராட்டத்துக்குப்பின் அமெரிக்காவின் பெய்வேன் ஸாங்கிடம் அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறினார். 
இது அமெரிக்க வீராங்கனையிடம் சிந்து அடையும் மூன்றாவது தோல்வியாகும். ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற சிந்து, அதற்கு பின் நடைபெற்ற ஜப்பான் ஓபன் போட்டியிலும் இரண்டாவது சுற்றில் வெளியேறினார். சீன ஓபனிலும் காலிறுதியில் தோல்வியடைந்தார்.
சாய்னா வெற்றி:
அதே நேரத்தில் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால் முதல் சுற்றில் 20-22, 21-17, 24-22 என்ற கேம் கணக்கில் ஹாங்காங் வீராங்கனை நான் ஹீ செங்கை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT