செய்திகள்

தியோதர் கோப்பை: விஹாரியின் சிறப்பான ஆட்டத்தால் 261 ரன்கள் எடுத்துள்ள இந்தியா பி அணி!

நடுவரிசை வீரர்கள் நன்கு விளையாடியதால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்துள்ளது...

எழில்

தியோதர் கோப்பை போட்டி இன்று முதல் நடைபெறுகிறது. தில்லியில் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 27 அன்று முடிவடையவுள்ளது. 

இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பி அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் நடுவரிசை வீரர்கள் நன்கு விளையாடியதால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 46, ஸ்ரேயஸ் ஐயர் 41, மனோஜ் திவாரி 52 ரன்கள் எடுத்தார்கள். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள விஹாரி 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்தியா ஏ தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT