செய்திகள்

ரஹானே 144*, இஷான் கிஷன் 114: இந்தியா சி அணி 352 ரன்கள் குவிப்பு!

எழில்

தில்லியில் நடைபெற்று வரும் தியோதர் கோப்பை போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற இந்தியா சி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்குச் சிறப்பாக விளையாடிய ரஹானேவும் இஷான் கிஷனும் பலமான கூட்டணி அமைத்து 31 ஓவர்கள் வரை விளையாடி 210 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். 87 பந்துகளில் 114 ரன்கள் குவித்த இஷான் கிஷன் முதலில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் சூர்யகுமார் யாதவ், 18 பந்துகளில் 4 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்து அசத்தினார். கேப்டன் ரஹானே, 156 பந்துகளில் 144 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  40 ஓவர்கள் வரை சற்று நிதானமாக விளையாடிய ரஹானே, கடைசி 10 ஓவர்களில் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

50 ஓவர்களில் இந்தியா சி அணி, 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்துள்ளது. உனாட்கட் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ள ஷபாஸ் நதீம், 10 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 62 ரன்கள் கொடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை": மோடி | செய்திகள்: சிலவரிகளில் | 20.05.2024

எத்தனை மனிதர்கள்

கனமழை நீடிக்கும்: 9 மாவட்டங்களுக்கு ’ஆரஞ்ச் எச்சரிக்கை’

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : பிரதமர் மோடி

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்

SCROLL FOR NEXT