செய்திகள்

கலீல் அகமதுக்கு ஐசிசி கண்டனம்

மேற்கிந்திய தீவுகளுடனான 4-ஆவது ஒருநாள் போட்டியில் விதிமீறலில் ஈடுபட்டதற்காக இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

மேற்கிந்திய தீவுகளுடனான 4-ஆவது ஒருநாள் போட்டியில் விதிமீறலில் ஈடுபட்டதற்காக இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 4-ஆவது ஒருநாள் போட்டி மும்பையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில், இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது போட்டியின் 14-ஆவது ஓவரில் சாமுவல்ஸை வீழ்த்தினார். அந்த விக்கெட் வீழ்ச்சியை அவர் ஆக்ரோஷமான முறையில் கொண்டாடினார். 

கலீல் அகமது-வின் இந்த உடல் மொழி பேட்ஸ்மேனை ஆக்ரோஷமாக செயல்பட தூண்டும் வகையில் உள்ளதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது. அதனால், ஐசிசி விதி 2.5-ன் படி அவருக்கு 1 புள்ளி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

போட்டி முடிந்த பிறகு, போட்டியின் கள நடுவர்கள் இயான் கூல்ட், அனில் சௌத்ரி, 3-ஆவது நடுவர் பால் வில்சன் மற்றும் 4-ஆவது நடுவர் செட்டிதோடி சம்சுதின் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை எழுப்பினர். கலீல் அகமது போட்டி நடுவர் கிறிஸ் பிராட்டிடம் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT