செய்திகள்

ஒருநாள் தொடர்: தீபக் சஹார் விலகல், சைனி அணியில் சேர்ப்பு!

2-ம் ஒருநாள் ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் கடைசி ஒருநாள் ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார்.

எழில்

டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. 

இந்நிலையில் 2-ம் ஒருநாள் ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் கடைசி ஒருநாள் ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார். இதையடுத்து நவ்தீப் சைனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT