செய்திகள்

3-வது டெஸ்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து: 448 ரன்கள் முன்னிலை!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 448 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது இங்கிலாந்து அணி...

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 448 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது இங்கிலாந்து அணி.

செயிண்ட் லுசியாவில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில்,இங்கிலாந்து அணி, 101.5 ஓவர்களில் 277 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பட்லர் 67, ஸ்டோக்ஸ் 79 ரன்கள் எடுத்தார்கள். மே.இ. அணி வீரர் ரோச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மே.இ. அணி முதல் இன்னிங்ஸில் 47.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிவேகப் பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய மார்க் வுட் 5 விக்கெட்டுகளையும் மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 123 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-ம் நாளின் முடிவில் அந்த அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது.

3-ம் நாளான நேற்றும் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. பர்ன்ஸ், ஜென்னிங்ஸ் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காமல் ஆட்டமிழந்தாலும் கேப்டன் ரூட்டும் டென்லியும் அற்புதமான கூட்டணி அமைத்தார்கள். 99 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து டென்லி ஆட்டமிழந்தார். இதன்பிறகு பட்லர், ரூட்டுக்கு நல்ல இணையாக விளங்கினார். அவர் நிதானமாக விளையாடி 115 பந்துகளில் 56 ரன்களுடன் வெளியேறினார். 120 பந்துகளில் அரை சதம்  எடுத்த ரூட் பிறகு 189 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதத்தைப் பூர்த்தி செய்தார். ரூட்டின் சதத்தால் இந்த டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெறுவது மேலும் கடினமாகியுள்ளது. 

3-ம் நாளின் முடிவில் இங்கிலாந்து அணி 100 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள்  எடுத்துள்ளது. ரூட் 111, ஸ்டோக்ஸ் 29 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 448 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT