ஆஸி. டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி வரும் சேதேஸ்வர் புஜாராவுக்கு பிசிசிஐ சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புஜாரா இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 74.42 சராசரியுடன் 521 ரன்களை விளாசியுள்ளார். அவரது அபார ஆட்டத்தால் முதன்முறையாக ஆஸி. மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது இந்தியா. இதற்கு வெகுமதி தரும் வகையில், ஏ பிளஸ் ஊதிய ஒப்பந்த பிரிவின் கீழ் அவரை கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
கிரிக்கெட் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய், தேர்வாளர் குழுத் தலைவர் எம்எஸ்கே. பிரசாத் ஆகியோர் கேப்டன் கோலி, பயிற்சியாளர் சாஸ்திரியுடன் இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொள்வர் எனத்தெரிகிறது. ஏ பிளஸ் பிரிவில் ஒரு வீரருக்கு ரூ.7 கோடியும், ஏ பிரிவில் ரூ.5 கோடியும், பி பிரிவில் ரூ.3 கோடியும், சி பிரிவில் ரூ.1 கோடியும் ஊதியமாக தரப்படுகிறது.
ஏ பிளஸ் பிரிவில் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷிகர் தவன் உள்ளனர்.