செய்திகள்

மலேசிய பாட்மிண்டன்: ஸ்ரீகாந்த், காஷ்யப், சாய்னா வெற்றி

DIN


மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், பாருபல்லி காஷ்யப், சாய்னா நேவால் ஆகியோர் தத்தமது ஆட்டங்களில் வென்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவால் 14-21, 21-18, 21-18 என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கின் டெங் ஸ்வானை வீழ்த்தி இரண்டாம் சுற்றக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-17, 21-11 என்ற கேம் கணக்கில் ஹாங்காங் வீரர் ஆக்நஸ் காவை வென்றார்.
பாருபல்லி காஷ்யப் 19-21, 21-9, 21-10 என்ற கேம் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸை வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி இணை 21-19, 21-17 என நெதர்லாந்தின் ராபின்-செலனா இணையை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT