செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் கடுமையாக போராடி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.

DIN

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் கடுமையாக போராடி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
 கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதியில் செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹலேப்.
 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், மூன்றாம் நிலை வீரர் பெடரரும் மோதினர்.
 முதல் செட்டை ஜோகோவிச் 7-6 எனவும், இரண்டாவது செட்டை 6-1 என பெடரரும், மூன்றாவது செட்டை 7-6 என ஜோகோவிச்சும் மாறி மாறி வென்றனர். நான்காவது செட்டை பெடரர் 6-4 என கைப்பற்றினார். கடைசி மற்றும் 5-ஆவது செட் மாரத்தான் ஓட்டம் போல் நீண்டு கொண்டே போனது. இறுதியில் 13-12 என கைப்பற்றி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச். 9-ஆவது முறையாக பட்டம் வெல்லும் பெடரரின் கனவு நிராசையானது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT