செய்திகள்

நாடு திரும்பினார் இலங்கை வீரர் மலிங்கா

DIN


தனது மாமியார் காலமானதால், நாடு திரும்பினார் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா.
டான்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த இலங்கை-வங்கதேச அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது. இந்நிலையில் அவரது மாமியார் காலமானதாக கிடைத்த தகவலை அடுத்து உடனே நாடு திரும்பினார் மலிங்கா. அடுத்து வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆட்டத்தில் மலிங்கா பங்கேற்பார் எனத் தெரிகிறது.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம்: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தின் போது ஆஸி. ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயமுற்றதால், அடுத்த முக்கியமான பாகிஸ்தானுடன் நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மிச்செல் மார்ஷ் இடம் பெறுகிறார். எத்தனை ஆட்டங்களில் ஸ்டாய்னிஸ் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT